LIBRARY OF COIMBATORE -31.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஆடிஸ் வீதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 31.01.2024.