Hon'ble Mayor Inspection at Ward No. 10

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சத்தி பிரதான சாலை, சிவானந்தபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் குழாயின் பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.ரா.கதிர்வேலுசாமி, திரு.வே.கதிர்வேல், திரு.பழனிசாமி (எ) சிரவை பெ.சிவா, திருமதி.எஸ்.பூங்கொடிசோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.03.2022.