HON'BLE MAYOR INSPECTION 01.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 4க்குட்பட்ட சரவணம்பட்டி, கந்தசாமி நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுவதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் திரு.கதிர்வேலுசாமி, திரு.பழனிசாமி (எ) சிரவை சிவா, திருமதி.பூங்கொடி சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், வட்டார கல்வி அலுவலர் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் திரு.ரமேஷ்பாபு, பள்ளி தலைமையாசிரியர்(பொ) திருமதி.எலிசபெத், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் ஆகியோர் உள்ளனர் 01.02.2024.