Hon'ble Mayor Function

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்களிப்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.51 இலட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர், மாணவர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், கல்வி குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.கதிர்வேலுசாமி, மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் இயக்குநர் திருமதி.சாகித்யா, பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கலாமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உள்ளனர் 04.12.2023.