Government Welfare Assistance Ceremony Coimbatore - 08.02.2024

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை சார்பில் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாக ஈரோட்டில் தொடங்கி வைக்கப்பட்டதையடுத்து, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மரியாதைக்குரிய துணை மேயர் திரு.வெற்றிசெல்வன் ஆகியோர் நலத்திட்டங்களை வழங்கினர்.