District Vigilance Officer/ Secretary Inspection (02.12.2023)

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் அவினாசி மேம்பாலம் சுரங்கப் பகுதியில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளரும், கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திருமதி.ஜெயஸ்ரீமுரளிதரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மோ.ஷர்மிளா, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.12.2023.