COMMISSIONER INSPECTION 20.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட உடையாம்பாளையம் அஞ்சுகம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பில்லூர் - III மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் திருமதி.கவிதா, மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர்கள் திரு.ஜெயின்ராஜ், உத்தமன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர் 20.01.2024.