COMMISSIONER INSPECTION 19.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.28க்குட்பட்ட டெக்ஸ்டூல் பாலசுந்தரம் சாலை, ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியில் உள்ள சாலையில் நான்கு சக்கர வாகனத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து தார் சாலையை சேதப்படுத்தியதற்காக, வாகன உரிமையாளருக்கு ரூ.10,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டார். உடன் மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.01.2024.