COIMBATORE CORPORTION 2 -11.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி சரவணம்பட்டியில் பில்லூர்-III திட்டம் மற்றும் அவினாசி, அன்னூர், சூலூர் ஆகிய பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் முன்னிலையில் மொத்தம் ரூ.895.20 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான 3.5கன மீட்டார் கொள்ளளவு கொண்ட புதிய இலகுரக (TATA INTRA) வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, திரு.கு.சண்முகசுந்தரம், திரு.பி.ஆர்.நடராஜன், நகராட்சி நிருவாக குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் திரு.தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.சு.சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மோ.ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 11.02.2024.