Coimbatore Corporation - News 11.05.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.55க்குட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, பாரதி நகர் பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்த ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 24X7 குடிநீர் விநியோக திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமானதாகவும், செய்துமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திருமதி.மாரிச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.தர்மராஜ், திரு.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.பாக்கியம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் திரு.எழில் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளனர் 11.05.2022.