Coimbatore Corporation - News 08.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட சிங்காநல்லூர் காவெட்டி நாயுடு லே அவுட் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திருமதி. ஜெகதீஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.08.2022