COIMBATORE CORPORATION -08.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், மத்திய மண்டலம் வார்டு எண்.83-க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா, நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தினை நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.95.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட கூடைபந்து அசோசியேசன் சார்பில் 50 சதவீத பங்களிப்பாக (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.48.909 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கூடைபந்து அசோசியேசன் தலைவர் திரு.ஜி.செல்வராஜ், செயலாளர் திரு.பாலாஜி ஆகியோர் வழங்கினர் 08.02.2024.