Skip to content
COIMBATORE CORPORATION -01.02.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.64க்குட்பட்ட புலியகுளம் மசால் வீதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஜெயபிரதாதேவி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர் 01.02.2024.