CCMC NEWS 9- 07.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17-க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.186.00 இலட்சம் மதிப்பீட்டில் 3.99 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சுபஸ்ரீ, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, செயற்பொறியாளர் திரு.இளங்கோ, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.ராஜேஷ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.