CCMC NEWS 8- 22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோபோடிக் இயந்திரத்தை இன்று (22.02.2024) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கத்தினை அளித்தனர். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் திருமதி.மாலதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் ஆகியோர் உள்ளனர்.