CCMC NEWS 7-24.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.01-க்குட்பட்ட துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிறுத்துவதற்கான பணிமனையாக மாற்றவும் மற்றும் பேட்டரி வாகனங்களை ரீசார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.ஜெயின்ராஜ் ஆகியோர் உள்ளனர்.