CCMC NEWS 7 - 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட அன்பு நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (11.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.அகமது கபீர், செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.