Skip to content
CCMC NEWS 7- 06.03.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலை, சங்கனூர் சாலை சந்திப்பின் அருகில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிருதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே.அர்ச்சுனன், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., துணை மேயர் திரு.ரா.வெற்றி செல்வன் ஆகியோர் உள்ளனர்.