CCMC NEWS 6- 27.02.2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.02.2024) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக எரிசக்தி துறை, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் ரூ.11.53 கோடி மதிப்பீட்டில் 230/110 கி.வோ கோயம்புத்தூர் துணை மின் நிலையத்தில் (டாடாபாத்) 100 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றியினை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வின்போது மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் திரு.சிவபிரகாசம், திரு.பரமேஷ்வரன், செயற்பொறியாளர்கள் திரு.வெங்கடேசன், திரு.அறம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.