CCMC NEWS 6- 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட கடலைக்கார சந்து பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் தீன்தயாள் அந்தயோத்யா யோஜனா - தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வீடற்ற ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.