CCMC NEWS 6-15.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (15.03.2024) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஏ.என்.டி அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 27 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், இடைநிற்றலை தடுத்திடவும் மற்றும் பொதுத் தேர்விற்கான ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்த அறக்கட்டளையச் சார்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். உடன் மண்டல குழு தலைவர் திருமதி.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், ஏ.என்.டி. தொண்டு நிறுவன அமைப்பாளர் திருமதி.லதா சுந்தரம், மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.முருகேசன், பட்டதாரி மேற்பார்வையாளர் திருமதி.நிர்மலா ஆகியோர் உள்ளனர்.