CCMC NEWS 6- 07.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் வாசுகி நகர், தங்கவேல் நகர், வேலவன் நகர், வெங்கடசாமி நகர், சாஸ்தா நகர் ஆகிய பகுதியில் ரூ.40.50 இலட்சம் மதிப்பீட்டில் 21 சாலைகளில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மொத்தம் 460 மீட்டர் தொலைவிற்கு சாலை ஒட்டுப்போடுதல் (Patch work) பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (07.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில் மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.