CCMC NEWS 5- 24.02.2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், நெய்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலைய வளாகத்தில் இன்று (24.02.2024) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.185.00 கோடி மதிப்பீட்டில் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், மண்டல குழு தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர் திருமதி.கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.