CCMC NEWS 5 -22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38க்குட்பட்ட வடவள்ளி கல்வீரம்பாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் இரண்டு அங்கன்வாடி மைய கட்டடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திருமதி.விமலா ஆகியோர் உள்ளனர்.