CCMC NEWS 5 - 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு குனியமுத்தூர் மைல் கல் பகுதியில் நடைபெற்றுவரும் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (11.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.