CCMC NEWS 5- 07.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவணம்பட்டி, பெருமாள் கோயில் வீதியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சிமென்ட் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுவருதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (07.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், உத்தமன், திரு.இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.