CCMC NEWS 30.08.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.42க்குட்பட்ட தவசி நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.பிரவீன்ராஜ், உதவி ஆணையர் திரு.சரவணன், செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.ஐசக் ஆர்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.