CCMC NEWS 3 -27.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலை சுங்கம் பகுதியில் 2.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (27.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.நடராஜன் ஆகியோர் உள்ளனர்.