CCMC NEWS 3-24.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15-க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அருகில் கழிவுநீர் உந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, பணியை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் திருமதி.மஞ்சுளா, மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.