CCMC NEWS 3 - 22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38க்குட்பட்ட ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு, பில்லூர் - III கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா ஆகியோர் உள்ளனர்.