CCMC NEWS 3 - 20.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.28க்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம் பகுதியில் புதிதாக நியாயவிலைக்கடை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (20.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.கண்ணகிஜோதிபாசு, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.