CCMC NEWS 3-15.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.75க்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், கே.கே.புதூர், கோவில்மேடு கிழக்கு பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (15.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர்கள் திருமதி.நித்யா, திரு.முரளிதரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.