CCMC NEWS 3 -14.03.2024

மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தினை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் இன்று (14.03.2024) துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், தி/ள் லயன் சர்வீஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.