CCMC NEWS 3- 05.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி புதூர் நகர், 3வது வீதியில் ரூ.154 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (05.03.2024) துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.ரவி, மண்டல குழு தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.