CCMC NEWS -29.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37க்குட்பட்ட மருதாபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.62 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, கல்வி குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.குமுதா குப்புசாமி, உதவி பொறியாளர் திருமதி.விமலா, சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.