CCMC NEWS 26.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, பிரபு நகரில் பொதுநிதியிலிருந்து ரூ.19.80 இலட்சம் மதிப்பீட்டில் 230 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சித்ரா தங்கவேல், திருமதி.கற்பகம், திருமதி.புஷ்பமணி, திருமதி.சுமதி, திருமதி.சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.மகேஷ், சுகாதார ஆய்வாளர் திரு.பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.06.2023