CCMC NEWS 25.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.27க்குட்பட்ட நவஇந்தியா, பாரதி காலனி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மாநகராட்சி 67 சதவீத பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் 33 சதவீத பங்களிப்புடன் என மொத்தம் ரூ.26.60 இலட்சம் மதிப்பீட்டில் 332 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், உதவி ஆணையர் (பொ)திருநூர்அகமது, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.