CCMC NEWS 24.01.24

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76 தெலுங்குபாளையம், ஜெயராம் நகர் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை சென்னை, மெட்ரோ குடிநீர் விநியோக பணிகளின் நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் குடித்துப்பார்த்து ஆய்வு செய்தனர். உடன் மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் திரு.சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.01.2024.