CCMC NEWS 2- 28.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.02.2024) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்கள். உடன் நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் திரு.நடராஜன், கிளை மேலாளர் திரு.சரவணராஜன், மாநகராட்சி உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உள்ளனர்.
 
`