CCMC NEWS 2-24.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.01-க்குட்பட்ட துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.ஜெயின்ராஜ் ஆகியோர் உள்ளனர்.