CCMC NEWS 2- 23.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட செங்காளியப்பன் நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை இன்று (23.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் உள்ளார்.