CCMC NEWS 2- 20.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.28க்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (20.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக்கேட்டறிந்து, பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அப்பகுதியில் தெருவிளக்கு அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.கண்ணகி ஜோதிபாசு, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.