CCMC NEWS 2-15.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.85க்குட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீர் மாசு படிந்துள்ளதால் மாற்று ஏற்பாடாக ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நஞ்சுண்டாபுரம் உஸ்னாபாத் பகுதியிலிருந்து புதிய ஆழ்குழாய் அமைத்து நீர் கொண்டு வந்து விநியோகம் செய்யும் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று(15.03.2024) துவக்கி வைத்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சரளா, திரு.அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர் (பொ) திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர்கள் திருமதி.சரண்யா, திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.