Skip to content
CCMC NEWS 2- 09.02.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் மற்றும் நாகராஜபுரம் பகுதியில் உள்ள மண் சாலையை ரூ.24.60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், ரூ.18.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.16.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் கோண்டி நகர் பகுதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொதுகழிப்பிடம் கட்டும் பணி, ரூ.8.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் ஆகியோர் உள்ளனர் 09.02.2024.