CCMC News - 19.09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண். 49க்குட்பட்ட பாரதியார் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, உடனடியாக சரிசெய்ய பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி. அன்னக்கொடி, உதவி ஆணையர்(பொ) திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர் திரு.ஐசக் ஆர்த்தர், சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.09.2022