CCMC NEWS 17.02.2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.02.2024) இந்து சமய அறநிலையத்துறை மூலம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்த குமார், அறங்காவலர் குழு தலைவர் திரு.ஜெயகுமார், துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் திரு.ரமேஷ், துணை ஆணையர் திருமதி.ஹர்ஷினி, மண்டலகுழு தலைவர் திருமதி. தெய்வயாணை தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.