CCMC NEWS 15.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூர், புதுமுத்து நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் திரு.நாசர், திரு.உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.06.2023