Skip to content
CCMC NEWS 13.06.2023
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.75க்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி பங்களிப்புடன் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கான எரிவாயு தகன கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் குத்துவிளக்கேற்றிவைத்து, திறந்து வைத்தார்கள். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திருமதி.அங்குலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.பெருமாள்சாமி, உதவி ஆணையர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் திரு.ராஜ்மோகன்நாயர், மாவட்ட இயக்குநர் திரு.மயில்சாமி, உதவி கவர்னர் திரு.சுமித்குமார் பிரசாத் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.