CCMC NEWS 13-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.25க்குட்பட்ட காந்தி மா நகர், ஹட்கோ காலனியில் மாநகராட்சி, லட்சுமி மில்ஸ் நிறுவனம் லிமிடெட், சக்தி சுகர்ஸ் லிமிடெட் மற்றும் திரு.பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் அப்ஸ்விங்ஸ் எடுக்கேர் (UPSWINGS EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள் மூலம் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் திருமதி.தவமணிபழனியப்பன், உதவி ஆணையர்(பொ) திரு.நூர்அகமது, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், WOW EDUCARE முதன்மை செயல் அலுவலர் திரு.சியாம் நிகோலஸ், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்