CCMC NEWS 12-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், பீளமேடு, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மாநகராட்சியில் பணியாற்றும் 1000 தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், பொது சுகாதார குழு தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி இயக்குநர் மரு.புவனேஸ்வரன், மரு.சுப்பராவ். பொது மேலாளர் திரு.லோகநாதன், நகர்நல அலுவலர் டாக்டர்.ஆர்.தாமோதரன், உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த்திவாகர். உதவி ஆணையர்கள் திரு.நூர்அகமது, திரு.செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.அரவிந்த், திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர் 12.09.2023